புதுச்சேரி,ஏப்.4- ஒன்றிய அரசின் மருந்துக் கட்டுப்பாட்டு நிறு வனத்தின் அனுமதியுடன் மாநில மருந்து கட்டுப் பாட்டுத் துறையின் மூலமாக இன்சுலின் மருந்து உற்பத்தி செய்வதற்கு புதுச்சேரி கன்னியக் கோவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை முதல்வர் அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் இதற்கான அனுமதியை முதல்வர் ரங்கசாமி வழங்கி னார். நிகழ்ச்சியில் சுகா தாரத் துறைச்செயலர் உதயகுமார் , மருந்து கட்டுபாட்டு அதிகாரி மருத்துவர் அனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.