districts

புதுவையில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் காவல்துறைக்கு சிபிஎம் கண்டனம்

புதுச்சேரி, ஜன. 2- புதுச்சேரியில் மக்கள் போராட்டங் களை ஒடுக்கும் காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து முதல்வர் ரங்கசாமிக்கு மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: புதுச்சேரி முத்தியால்பேட்டை, ஏழை மாரியம்மன் கோவில் அருகில் அரசுப் பள்ளி, குடியிருப்புகள் உள்ளது. இந்த இடத்தில் கேரிசன் என்ற ரெஸ்டோ பார் மற்றும் நடன விடுதி டிசம்பர் 11 ஆம் தேதி திறக்கப்படுவதாக ஊர் மக்களிடம் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. மேலும் வாட்ஸ்அப் மூலமும் விளம்பரப்படுத்தினர்.  அந்த விளம்பரத்தில், பெண்கள் மது அருந்தினால் இலவசமாக மது வழங்கப்படும் என்று பெண்களை இழிவுபடுத்தும் வகையில்  சித்தரிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை.  இந்நிலையில், பார் மற்றும் நடன விடுதி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அந்த பகுதி மக்களும் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு காவல்துறை கண்காணிப்பாளர் கிழக்கு பிரிவில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. முத்தியால் பேட்டை காவல்துறை அதிகாரியிடம் இருந்தும் பதில் எதுவும் வரவில்லை.

இதனையடுத்து, டிச. 24 அன்று திட்டமிட்டப்படி காலை 10 மணிக்கு ஏழை மாரியம்மன் கோவில் எதிர்புறம் போக்குவரத்திற்கு இடை யூறு இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதுவரைக்கும் காவல் துறையினரும் பாதுகாப்பு அளித்தனர்.   பிறகு, அங்குவந்த காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் திடீரென்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை எனக்கூறி பதற்றத்தை ஏற்படுத்தினார். பின்னர், வலுக்கட்டாயமாக கைது செய்து, வழக்கும் பதிவு செய்தார். போராட்டம் நடத்த அனுமதி யில்லை என்று எழுத்து பூர்வமாகவோ, வாய்மொழியாகவோ கூட முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. ஜனநாயக ரீதியில் மக்களாட்சியில் ஒன்று கூடி இயக்கம் நடத்துவது அரசி யலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமையாகும். இதை சீர்குலைக்கும் விதமாக புதுச்சேரி காவல்துறை முது நிலை கண்காணிப்பாளர் செயல்பட்டு வருகிறார். ஜனநாயக ரீதியில் முறைப்படி மக்களுக்காக நடத்தப்படும் இயக்கங் களை காவல் துறை அதிகாரிகள் ஒடுக்க நினைப்பது மக்கள் விரோத செயல்பாடாகும். எனவே அத்துமீறி செயல்படும் காவல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.