புதுச்சேரி,ஜன.1- புதுச்சேரி மாநிலத்தில், மக்கள் தொகைக்கு இணை யாக வாகனங்கள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. கடந்த ஆண்டு கணக்குப்படி, 10.50 லட்சம் வாகனங்கள் போக்கு வரத்து துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.அத்து டன், மக்கள் அடர்த்தி ஆண்டுக்காண்டு அதி கரித்து வருகிறது. அத்து டன், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், அதை ஈடுகொடுக்க முடி யாமல் புதுச்சேரி சாலைகள் திணறி வருகின்றன. எனவே, புதுச்சேரியில் சாலைகளில், பொது போக்குவரத்தை அதி கரிக்கும் வகையில், தண்ட வாளத்தில் ஓடும் டிராம் வண்டிகள் இயக்குவது தொடர்பான சாத்திய கூறு களை புதுச்சேரி அரசு ஆராய்ந்து வருகிறது. புதுச்சேரி சாலையில் நடுவில் டிராம் வண்டிகள் (டிராம் ரயில்) இயக்குவது தொடர்பாக, தனியார் நிறுவனம் ஒன்று செயல் திட்டத்தை உருவாக்கி, புதுச்சேரி அரசையும் அணுகியுள்ளது. இத்திட்டம் குறித்து, முதல்வர், அமைச்சர்கள் முன்னிலையில் விரைவில் செயல் விளக்கம் காண்பித்து, ஒப்புதல் பெற திட்டமிடப்பட்டுள்ளது. அதில், டிராம் வண்டி கள் காலாப்பட்டிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்) வழியாக கோரிமேடு வரையிலும், அங்கிருந்து பேருந்து நிலை யத்தில் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக இயக்கலாம் என்றும், அதற்கான சாத்திய கூறுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் சூழ்நிலையில், டிராம் வண்டிகள் இயக்கினால் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரிதும் கை கொடுக்கும் என்பதால், சுற்றுலா துறை மூலம் டிராம் வண்டிகள் மூன்று அல்லது நான்கு பெட்டிகளுடன் துவக்கலாம் என்றும் அரசு ஆலோசித்து வருகிறது. இருப்பினும், சாலை போக்குவரத்து பாதிக்காத வகையில் டிராம் ரயிலுக்கான தண்ட வாளத்தை அமைப்பதில் நடைமுறை சிக்கல்க ளும் உள்ளன. பாக்கமுடை யான்பட்டில் இருந்து ராஜீவ் சிக்னல், இந்திரா சிக்னல் வழியாக மேம்பாலம் ரூ. 400 கோடியில் அமைய உள்ளது. அப்படி இருக்கும் போது டிராம் வண்டிகள் தண்டவாளம் அமைத்து இயக்குவது சவாலாகவே இருக்கும். எனவே, மேம்பாலம் திட்டத்திலேயே டிராம் வண்டிகள் தண்ட வாள பாதை முடிவு செய்ய வேண்டிய அவசி யம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக டிராம் வண்டி செயல் விளக்க கூட்டத்தில் விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
டிராம் வண்டி சேவை யில் இந்தியாவில் சென்னை தான் முன்னோடி. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னையில், முதன் முதலில் 1877 ஆம் ஆண்டு சிறிய தண்டவாளத்தில் குதிரை கள் இழுத்துச் செல்லும் வகையில் டிராம் ரயில்கள் இயக்கப்பட்டன. அதில் பயணிக்க சென்னை மக்கள் இடையே பெரும் வரவேற்பு இருந்தது. அடுத்து இந்த டிராம் களை நவீனப்படுத்த 1892 ஆம் ஆண்டு மின்சார டிராம் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மெட்ராஸ் டிராம் வேல்ஸ் என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் பணிகள் நடந்து 1895ம் ஆண்டு முதல் மின்சாரத்தில் இயங்கும் டிராம் வண்டிகள் அறி முகம் செய்யப்பட்டது. இந்தியாவில் எலெக்ட்ரிக் டிராம் சென்னை யில்தான் முதன் முதலில் ஓடியது. லண்டன் நகரில் கூட அப்போது எலெக்ட்ரிக் டிராம்கள் ஓட வில்லை. சென்னையில் அறி முகமாகி 10 ஆண்டு களுக்குப் பிறகு தான் அமெரிக்காவில் ஓடியி ருக்கிறது. கடுமையான நஷ்டம் காரணமாக, அவர்களால் 1953 ஆம் ஆண்டுக்கு மேல் டிராம்களை இயக்க முடிய வில்லை. இப்போது கொல்கத்தாவில் மட்டும் டிராம்கள் இயக்கப்படு கின்றன என்பது குறிப் பிடத்தக்கது. அதில், டிராம் வண்டிகள் காலாப்பட்டில் இருந்து இ.சி.ஆர்., வழியாக கோரிமேடு வரை யிலும், அங்கிருந்து பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக இயக்கலாம் என்றும், அதற்கான சாத்திய கூறுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.