புதுச்சேரி, நவ. 30 - மக்கள் விரோதத் திட்டங்களுக்கான பரிசோதனைக் கூடமாக புதுச்சேரியை மாற்ற முயலும் பாஜகவின் சதியை முறி யடிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் அறைகூவல் விடுத்தார்.
கொட்டும் மழையில் பேரணி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில 24-ஆவது மாநாடு வில்லியனூரில் சனிக்கிழமை (நவ.30) அன்று கொட்டும் மழையில் தொண் டர்கள் அணிவகுப்புடன் துவங்கியது. பேரணிக்கு மாநில செயற்குழு உறுப்பி னர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி னார். மூத்தத் தலைவர் சுதா சுந்தர ராமன் பேரணியை துவக்கி வைத்தார்.
தியாகிகள் நினைவுச் சுடர்
அதனைத் தொடர்ந்து கட்சியின் புதுச்சேரி நகரக்குழு சார்பில்- செயற் குழு உறுப்பினர் கலியமூர்த்தி தலை மையில், ‘ஜூலை 30 தியாகிகள் நினை வுச் சுடர்’ மாநாட்டு அரங்கத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதனை மூத்தத் தலைவர் தா. முருகன் பெற்றுக்கொண் டார். அதனைத் தொடர்ந்து பாகூர் கமிட்டி செயலாளர் சரவணன் தலை மையில் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் நினைவு சுடர் கொண்டுவரப்பட்டது அதனை மாநிலக்குழு உறுப்பினர் ஜி. ராமசாமி பெற்றுக் கொண்டார்.
தா.முருகன் கொடியேற்றினார்
உழவர்கரை கமிட்டியின் செயலா ளர் ராம்ஜி தலைமையில் கொண்டு வரப்பட்ட மாநாட்டுக் கொடியை மூத்த தலைவர் பி.கலியபெருமாள் பெற்றுக் கொண்டார். தோழர் என். சங்கரய்யா நினைவு கொடிக்கம்பம் மண்ணடிபட்டு கமிட்டி செயலாளர் அன்புமணி தலை மையில் கொண்டுவரப்பட்டது. அதனை மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் ஞானசேகரன் பெற்றுக்கொண்டார். மாநாட்டுக் கொடியை மூத்த தலைவர் தா.முருகன் ஏற்றி வைத்தார்.
தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கத்தில் பொது மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டிற்கு மாநில செயற்குழு உறுப்பினர் வெ. பெருமாள் தலைமை தாங்கினார்.
ஜி.ராமகிருஷ்ணன் துவக்கவுரை
மாநாட்டைத் துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் உரையாற்றினார். அப்போது, “மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே அரசு இருந்தால் டபுள் என்ஜின் அரசாக இருக்கும் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். டபுன் என்ஜின் அரசால் மக்களுக்கு நன்மை இல்லை, கெடுதல் தான். மத்தி யிலும், மாநிலத்தில் ஒரே அரசாக இருப்ப தால் புதுச்சேரி மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி பரி சோதனை கூடமாக மாற்றப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளை மூடியது, மின்துறை யை தனியார் மயமாக்குதல், ப்ரீபெய்டு மின் மீட்டர் பொருத்துதல், மின்கட்ட ணத்தை அதிகரித்தல் ஆகியவை உதா ரணங்கள்.
எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இருப் பதை விட மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுவதே அரசியல் கட்சிகளுக்கு முக்கியம். மக்கள் பிரச்சனைகளை ஒன்றிய பாஜக அரசு கவனம் செலுத்த வில்லை. கார்ப்பரேட் அதிபர்களுக்கு வரியை மட்டும் ரத்து செய்கிறார்கள் எனவே அகில இந்திய அளவில் பாஜக வை தோற்கடிக்க வலுவான மாற்று சக்தியை உருவாக்குவதே மார்க்சிஸ்ட் கட்சியின் லட்சியம். அதற்காக தொட ர்ந்து பாடுபடும்” என்று அவர் கூறினார்.
என். குணசேகரன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பி னர் என். குணசேகரன், பிரதிநிதிகளின் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசு கையில், “இந்திய மக்களை பிளவு படுத்தும் ஆர்எஸ்எஸ், பாஜகவின் முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பாஜக - ஆர்எஸ்எஸ் முயற்சியை முறியடிக்க இந்த மாநாட் டில் அதற்கான போராட்டத் திட்டத்தை வகுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
வாழ்த்துரை
கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுக நயினார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநி லச் செயலாளர் அ.மு. சலீம் சிபிஐ (எம்.எல்) கட்சியின் மாநில செயலாளர் சோ. பாலசுப்பிரமணியன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.
இன்று மாநாடு நிறைவு
புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங் கேற்றுள்ளனர். தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமையும் (டிச.1 ) மாநாடு நடைபெறு கிறது. மாநாட்டில் புதுச்சேரி மாநில புதிய மாநிலக் குழு தேர்வு செய்யப்பட உள் ளது. தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன.