புதுச்சேரி,மார்ச்.9- சர்வதேச மகளிர் தினத் தையொட்டி, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுச் சேரி மாநிலம், பாகூரில் கரு த்தரங்கம் மற்றும் சாதனை பெண்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சங்கத்தின் கொம்யூன் தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். “மகளிர் தின உருவான வரலாறு”என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வச்சலா கருத்துரை வழங்கினார். “பெண்களின் பாதுகாப்பும் சவால்கள்”என்ற தலைப் பில் மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் இள வரசி கருத்துரை வழங்கி னார். பல்வேறு துறைகளில் சாதனை செய்து வரும் பெண்களுக்கு பாராட்டு விழாவில், பாகூர் காவல் நிலைய துணை உதவி ஆய்வாளர் பரிமளா, ஆசிரி யர்கள் பூரணி, தமிழரசி, இடுகாட்டில் ஈமச்சடங்கு செய்பவர் ஆகாசவாணி, வீராங்கனை தமயந்தி, கடை நடத்தும் தாமரைச்செல்வி ஆகியோரை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட் டது. இவ்விழாவில் சங்கத் தின் மாநிலத் தலைவர் டி.ஜி. முனியம்மாள், நிர்வாகிகள் குப்பு,லட்சுமி, புஷ்பா, அமுதா, சாந்தி, மின்னலா உட்பட திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.