districts

img

புதுச்சேரியில் இலவச மின்சாரம் தொடரும்: அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி, டிச.27 - ப்ரீ பெய்டு மின் மீட்டர் திட்டத்தில் விவசாயிகள், குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டார். 

பின்னர் அவர் கூறுகையில், புதுச்சேரி மாநிலம் முழுவதும் 126 அரசு  உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஒன்றிய அரசின்  இடைநிலைக் கல்வி வாரியத்தின் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024-25 கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ  நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி ஏப்ரல் 1 ஆம் தேதி வகுப்புகள்  தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெறும். இதில் கோடை விடு முறை மே மாதம் அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் சுடிதார் அணிந்து செல்லலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். இதை புதுச்சேரியில் அமல்படுத்து வது குறித்து முதல்வருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன.

மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்ற பெயரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலையும் அளவில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது. ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்த காங்கிரசுக்கு எந்த தகுதியும் இல்லை. முதலில் நகரப்பகுதியில் 40 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் அமைச்சராக இருந்தபோது தான். இன்றைக்கு மக்களை திசை திருப்பவே போராட்டத்தை அறிவித்துள்ள னர். இது மக்களை ஏமாற்றும் நாடகம். 

மின் கட்டணத்தை பொறுத்தவரை அரசாங்கம் நிர்ணயம் செய்யவில்லை. இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான் நிர்ணயிக்கிறது. ஒன்றிய மின்துறை அமைச்சருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளோம். மின்சாரத்தை கொள்முதல் செய்யும் போது, விலை அதிகரிக்கிறது, அதை நுகர்வோரிடம் வசூலிக்க வேண்டிய கட்டாய சூழல், இங்கே  மின்சாரம் கொள்முதல் விலை குறைவாக இருக்கிறதோ, அங்கிருந்து  புதுச்சேரிக்கான மின் தொகுப்பை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்துள் ளோம். ப்ரீபெய்டு மின் மீட்டர் பொருத் தினாலும், விவசாயிகள் மற்றும் குடிசைகளுக்கு வழங்கும் இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும். 

இவ்வாறு அவர் கூறினார்.