புதுச்சேரி,பிப்.15- நலவாரிய திட்டங்களை அமல்படுத்தக் கோரி சிஐடியு சார்பில் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களுக்கு மாதம் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 நிர்ணயம் செய்ய வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்களின் நல வாரிய கூட்டத்தை கூட்டி நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டு மான தொழிலாளர்களை அலை கழிக்காமல் நல வாரியத்தில் உறுப்பி னர்களாக பதிவு செய்ய வேண்டும். மரணமடைந்த அமைப்பு சாரா தொழிலாளர்களின் குடும்பங்க ளுக்கான ஈமச்சடங்கு மற்றும் இறப்பு கால குடும்ப உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும். தொழிற்சாலைகளின் தொழிலாளர் பிரச்சினை களில் ஒப்பந்ததாரர்களின் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும். தொழிற்சாலைகளில் ஏற்படும் தொழிலாளர் பிரச்சினைகளில் உயர் மட்ட அளவில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி தொழிலாளர் நல்லுறவை பேணி பாதுகாக்க வேண்டும். சாலையோர வியாபாரி களின் பாதுகாப்பு சட்டம் 2014இன் படி வியாபாரம் செய்திடும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. சிஐடியு புதுச்சேரி மாநிலத் தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் சீனுவாசன், நிர்வாகிகள் ராமசாமி, கொளஞ்சியப்பன், தினேஷ்குமார், பச்சைமுத்து, மணிபாலன், ராஜ்குமார், மதிவாணன், மது, வடிவேல், ரவிச்சந்திரன், விஜய குமார், மணவாளன், சூரியன், ரமேஷ், முருகன், செந்தில்குமார், சங்கரன், அன்பரசிஜூலியட்,உமா, ரேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.