districts

img

காவலர் தேர்வுக்கு வந்த புதுப்பெண்

புதுச்சேரி, பிப்.8 - புதுவையில காவல் துறையில் காலி யாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீசியன்கள், 29 டெக்ஹேண்ட்லர் என மொத்தம் 431 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. காவலர் பணிக்கு விண்ணப்பித்த ஆண்களுக்கான உடல் தகுதி தேர்வு கடந்த 8ஆம் தேதி தொடங்கி முடிவடைந்த நிலையில், பெண்க ளுக்கான உடல் தகுதி தேர்வு திங்களன்று (பிப். 7) தொடங்கியது. காவலர் பணிக்கு மதகடிப்பட்டு அருகே உள்ள பி.எஸ்.பாளை யத்தை சேர்ந்த பி.பி.ஏ. பட்டதாரியான பிரவீணா (25) விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் பிரவீணாவுக்கும் கிளிய னூரை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் அரிபிரசாத்துக்கும் திருமணம் நிச்சயிக் ்கப்பட்டு, அவர்களது திருமணம் அங்குள்ள சிவன் கோவிலில் செவ்வா யன்று (பிப். 8) காலை நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் பிரவீணா தான் காவலர் தகுதி தேர்வுக்கு செல்ல வேண்டும் என மணமகன் குடும்பத்தா ரிடம் தெரிவித்தார். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து திருமணம் முடிந்தவுடன் பிரவீணா புதுவை கோரி மேடு ஆயுதப்படை மைதானத்தில் நடை பெற்ற  காவலர் தகுதி தேர்வில் பங்கேற் ்றார். அவருடன் கணவர் அரி பிரசாத்தும் வந்திருந்தார்.