districts

கட்டிட தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க கோரிக்கை

புதுச்சேரி, ஏப். 17- கட்டிட தொழிலாளர்க ளின் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய உயர் கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும் என சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் அமைப்பு கூட்டம் புதுச்சேரி பெத்துசெட்டிப் பேட்டையில் பிரதேச பொருளாளர் ஜீவானந்தம் தலைமையில் ஞாயிறன்று (ஏப். 17) நடைபெற்றது. இதில் சிஐடியு பிரதேச தலைவர் முருகன், செயலாளர் சீனிவாசன், கட்டுமான தொழிலாளர் சங்க பிரதேச செயலாளர் கலியன் ஆகியோர் பேசினர். கிளை தலைவராக சீமான், செயலாளராக கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானம்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி யில் உள்ள கட்டுமான தொழி லாளர் நல வாரியத்தில் போலியாக பதிவு செய்துள்ள உறுப்பினர்களை நீக்க வேண்டும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டிட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய உயர் கல்வி உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு தலைக் கவசம் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;