districts

img

தலித் சுப்பையா காலமானார்

புதுச்சேரி, பிப். 16- தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி பிர தேச முன்னாள் தலைவரும், சமூக செயற்பாட்டாளரு மான தோழர் தலித் சுப்பையா (68) புதனன்று (பிப். 16) காலமானார். இவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னை வாழ் நாள் முழுவதும் அர்பனித்து கொண்டவர். மார்சிய, பெரி யார் சிந்தனைகளை பரப்பி யவர். சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக பாடல் களை எழுதி தானே மேடையில் பாடுவார். புதுச்சேரி முதலியார் பேட்டை, புவன்கரே வீதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டி ருந்த அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செய லாளர் ஆர்.ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் சீனுவாசன், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலை வர் அரிகிருஷ்ணன், செயலா ளர் ராமசாமி, புதுவை சப்தர் ஹஸ்மி கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அன்பு மணி, தவில் கலைஞர்கள் விநாயகம், அமர்நாத், பாடக ர்கள் உமா, ரமேஷ், சேகர் உள்ளிட்ட பலர் மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் தேங்காய்திட்டு பகுதியில் உள்ள இடுகாட்டில் புத ன்று மாலை அடக்கம் செய்ய ப்பட்டது.