புதுச்சேரி, ஜூலை 19- ஒன்றிய பாஜக அரசின் வரி கொள்கையை மாற்று வதன் மூலம் ஏழை-எளிய மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.
புதுச்சேரி மக்களின் உணவு-உரிமையை பாது காப்பதற்கான ரேசன் கடை களை திறக்க வேண்டும், குடியிருப்பு கோவில் பள்ளிக்கூடங்கள் அருகில் உள்ள ரெட்ரோ பார்களை மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியது வரு மாறு:
பிரதமர் மோடி தலை மையில் ஒன்றிய பாஜக கூட்டணி அரசு, ஏழை-எளிய மக்களுக்கு அரசாக இல்லை. கார்ப்ப ரேட் நிறுவனங்கள், பணக்காரர்க ளுக்கான அரசாங்கமாக செயல்படுகிறது. நாட்டில் பெரும்பகுதி ஏழை மக்களின் பிரச்சனையே ரேசன் தான். ஆட்சி யாளர்களின் அரசியல், யாருக்கு ஆதரவாக இருக்கிறது என்பது “ரேசன்”என்ற வார்த்தைக்கு பின்னால் இருக்கிறது.
காரணம், ரேசன்தான் ஏழை மக்களின் வாழ்வாதா ரமாகும். ஆனால், ஒன்றிய பாஜக மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் அரசுகள் தவ றான கொள்கை நிலைப்பாடு களை எடுத்துள்ளது. மிக மோசமான பொருளாதார கொள்கை பின்பற்றி வரு கிறது.
வரி கொள்கையில் மாற்றம்
ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி, கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீதமான ஏழை-எளிய மக்களிடம் இருந்தும் 64 விழுக்காடு வசூல் செய்யப்படுகிறது. அதே நேரத்தில், 10 விழுக்காடு மட்டுமே உள்ள செல்வந்தர்கள், பணக்காரர்கள், சூப்பர் பணக்காரர்களிடம் வெறும் 4 விழுக்காடு மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூ லிக்கப்படு கிறது. இதில் இருந்து, யாருக்கான அரசாக உள்ளது என்று புதுச்சேரி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதனால் தான் இருப்போருக்கும், இல்லா தோருக்கு வித்தியாசம் அதிகரிக்கிறது. எளிய மக்களுக்கான வரியை குறைத்து, ரத்து செய்யப் பட்ட 2 விழுக்காடு செல்வ வரியை திரும்ப கொண்டு வரவேண்டும். குறைக்கப்பட்ட கார்ப்பரேட் வரியை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் ஏழை மக்களின் வாழ்க்கை யில் ஒளியேற்ற முடியும்
இவ்வாறு உ.வாசுகி பேசினார்.
இம் மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுதா சுந்தரராமன், வெ. பெருமாள் ஆகியோர் தீர்மானங்களை வலி யுறுத்தி பேசினர். செயற் குழு உறுப்பினர்கள் ராமச் சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனு வாசன், பிரபுராஜ், கொளஞ்சியப்பன், கலிய மூர்த்தி, சத்தியா, இடைக்கமிட்டி செயலாளர் கள் மதிவாணன், ராம்ஜி, ராமமூர்த்தி, அன்பு மணி, சரவணன், தமீம் மற்றும் மாநிலக்குழு உறுப்பி னர்கள் உட்பட திரளா னோர் பொது மாநாட்டில் பங்கேற்றனர்.
புதுவை சப்தர் ஹஸ்மி கலைக்குழுவின் அரசி யல் பாடல் நிகழ்ச்சி நடை பெற்றது.