districts

img

ரேசன் கடைகளை திறக்ககோரி புதுவையில் பிரச்சாரம் துவங்கியது

புதுச்சேரி, ஜூலை 25- புதுச்சேரியில் ரேசன் கடை களை  திறக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கையெழுத்து இயக்க பிரச்சாரம் தொடங்கியது. புதுச்சேரி மாநிலத்தில் ரேசன் கடைகளை திறந்து இலவச அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலைக்கு வழங்க வேண்டும். சிவப்பு அட்டை தாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 9,000, மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 4,500 உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி புதுச்சேரி தலைமைச் செயலகம் நோக்கி பேரணியும், காத்திருப்பு போராட்டமும் நடை பெற உள்ளது. இதையொட்டி 50,000  மக்களிடம் கையெழுத்து பெறும் பிரச்சார இயக்கம் திங்கட்கிழமை (ஜூலை 25) தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு துவங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உழவர்கரை நகரச் செயலாளர் ஆர்.எம்.ராம்ஜி தலைமையில், கட்சியின் முன்னாள் மத்தியக் குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன் துவக்கி வைத்தார். மாநிலச் செயலா ளர் ஆர். ராஜாங்கம், மூத்தத் தலை வர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, சத்தியா மற்றும்  இடைக்கமிட்டி செயலாளர்கள் மதிவாணன், அன்புமணி, மாநில  குழு உறுப்பினர்கள் ராமசாமி, ஆனந்த், ரமேஷ், இளவரசி, சஞ்சய் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக புதுவை சப்தர் ஹாஷ்மி கலைக்குழுவின் அரசியல்  நையாண்டி நிகழ்ச்சி நடைபெற்றது.