புதுச்சேரி, ஜூலை 13- புதுச்சேரி அரசு துறை யில் பல ஆண்டுகளாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வயது தளர்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பட்டவர்களிடம் கோரிக்கை வைக்கப் பட்டதே காரணம். 2 ஆண்டு வயது தளர்வு அளித்து, கடந்த 2020 ஆம் ஆண்டு அரசுத்துறையில் காலிப் பணியிடங்கள் கான தேர்வு நடைபெற்றது.
குரூப் சி பணியிடங்களை நிரப்ப நியமன விதிகளை, மாநில அரசு, துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுடன் திருத்தம் செய்ய அனு மதிக்கப்பட்டது. அதன்படி குரூப் சி பணியிடங்களில் காவலர் பணி, எல்.டி.சி., யு.டி.சி., தேர்வின் போது கொரோனா ஊரடங்கு காரணம் காட்டி, 2 ஆண்டு வயது தளர்வு அளிக்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது. இதற்கான கோப்பு கள் தயாரிக்கப்பட்டு ஒன்றிய பாஜக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கைவிரிப்பு
ஒன்றிய பாஜக அரசு இதை பரிசீலனை செய்து ஒன்றிய அரசின் குரூப் பி, அரசிதழ் பதிவு பெறாத பணி யிடங்களுக்கு 2 ஆண்டு வயது தளர்வு அளிக்க முடியாது என தற்போது கை விரித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவை சுட்டிக்காட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து துறை களுக்கும் நிர்வாக சீர்திருத் தத்துறை சார்பில் சுற்ற றிக்கை ஒன்று அனுப்பட் டுள்ளது.
இதில் அரசு பணி ஆட் சேர்ப்பு அதிகபட்ச வயது வரம்பு 2 ஆண்டு தளர்த்த, ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே கேடர் கண்ட்ரோலிங் அதி காரிகள் காலியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு நடை முறை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் 2 ஆண்டு வயது தளர்வு கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த புதுச்சேரி இளை ஞர்களை ஒன்றிய பாஜக அரசு ஏமாற்றி விட்டது.