districts

img

அமைப்புசாரா தொழிலாளர் வாரியத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்குக: சிஐடியு

புதுச்சேரி, மார்ச் 16- அமைப்புசாரா தொழிலாளர்களின் நலவாரியத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது. சிஐடியு புதுச்சேரி பிரதேச ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமை யாளர்கள் சங்கத்தின் பிரதேச அள விலான அனைத்து கிளை நிர்வாகி கள் கூட்டத்திற்கு சிஐடியு பிரதேச செயலாளர் ஜி. சீனுவாசன் தலைமை தாங்கினார். பிரதேச தலைவர் முருகன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஆட்டோ சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மது (எ) லிங்கேசன் வேலு, விஜயகுமார், மணவாளன், நூர்முகமது, பழனி பாலன், மனோகர், செந்தில், ஆனந்த், செல்வம், ராமு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தீர்மானம் புதுவை அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆட்டோ உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் நலவாரியத்தை செயல்படுத்தி முதல்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆட்டோ உரிமையாளர் இறந்துவிட்டால் உரிமம், பெயர் மாற்றம் செய்ய முடியாமல் உள்ள வாகனங்களை போக்குவரத்து துறையே எடுத்துக்கொண்டு புதிதாக உரிமம் வழங்க வேண்டும். அமைப்புசாரா நல வாரிய உறுப்பினராக பதிவு செய்து உயிரிழந்த குடும்பங்களுக்கு கடந்த 5 ஆண்டுகாலமாக இறப்பு நிவாரண நிதி கொடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதில் புதுவை அரசு மனிதாபிமான முறையில் தலையிட்டு உதவி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுச்சேரி ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சிஐடியு சங்கத்தின் 7ஆவது மாநில மாநாட்டை மே மாதம் முதல் வாரத்தில் புதுச்சேரியில் சிறப்பாக நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.