புதுச்சேரி, டிச.23- எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவு கலை இலக்கிய ஆய்வு மையம் அமைக்க புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுப் பணித்துறை அமைச்சர் க. லட்சுமி நாரா யணனை சந்தித்த முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெரு மனறத்தின் தலைவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். இச்சந்திப்பின் போது முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் சு. ராமச்சந்திரன், புதுச்சேரி செய லாளர் கலியமூர்த்தி, பொருளாளர் அருண் நிர்வாகிகள் அன்பழகன், கணேசன் மற்றும் கலை இலக்கியப் பெரு மனறத்தின் தலைவர் எல்லை. சிவக்குமார், பொதுச் செயலா ளர் பெ. பாலகங்காதரன் துணைத் தலைவர் ஓவியர் கா. முனிசாமி, பட்டிமன்ற பேச்சாளர் கலக்கல் காங்கேயன், தமிழ்சங்க துணைத் தலைவர் பொறியாளர் மு. பால சுப்பிரமணியன் ரமேஷ்பைரவி ஆகியோர் உடனிருந்தனர்.