புதுச்சேரி,ஆக.2- புதுச்சேரியில் மீண்டும் இலவச அரிசி- மானிய விலையில் பருப்பு, கோது மை வழங்கப்படும் என்று முதல்வர் என். ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக.2) காலையில் துவங்கியது. 2024-25 ஆம் ஆண்டுக் கான பட்ஜெட்டை முதலமைச்சர் என்.ரங்கசாமி தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
ஸ்மார்ட் பிடிஎஸ் திட்டம் நடப்பு நிதியாண்டு முதல் புதுச்சேரியில் செயல் டுத்தப்படும். இந்த திட்டம் கொள்முதல் விலையிலிருந்து விநியோகம் வரை நேர அடிப்படையில் உணவு தானிய இயக்கத்தை கண்காணிக்க உதவும்.
நடப்பு நிதியாண்டு முதல் இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகிய உணவுப் பொருட்கள் வழங்கப்படும்.
கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் ‘புதுமை பெண்’ என்ற திட்டத்தின் கீழ் பணிபுரியும், கல்லூரி செல்லும் ஆதிதிராவிடர் பெண்கள் 500 பேருக்கு 75 விழுக்காடு மானியம் - அதிகபட்சம் ரூ. 1 லட்சம் நிதி, மின்சார வாகனம் வாங்க வழங்கப்படும்.
2,500 வீடுகள்
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில், 2 ஆயிரத்து 500 வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடுகள் நிறைவு செய்யாத பயனாளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும்.
கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 1000
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து, இளநிலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் 3 ஆண்டுக்கு வழங்கப்படும்.
கூட்டுறவு சங்கங்கள் புனரமைப்பு
புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் நலிவடைந்த கூட்டுறவு சங்கங்களை பலப்படுத்த ரூ.15 கோடி நடப்பு நிதியாண்டில் வழங்கப்படும்.
தடுப்பூசி அட்டவணைப் படி அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ளும் புதுவையை பூர்வீகமாக கொண்ட பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும்.
கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வது தொடர்பாக நிர்வாக விதிமுறைகளில் ஒரு முறை தளர்வு அளித்து, விண்ணப்பங்களை பரிசீலிக்க ஒப்பீட்டு சேவை பயன் கொள்கையை உருவாக்க அரசு ஆராய்ந்து வருகிறது.
ஹோமியோபதி பிரிவு
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஹோமியோபதி மருத்துவ பிரிவு, மருந்தகம் தொடங்கப்படும்.
குறைந்தபட்ச ஊதியம் உயர்வு
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 2017-க்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் ரூ. 5,220-ல் இருந்து ரூ. 13 ஆயிரம் ஆக பல்வேறு வேலைக்குத் தகுந்தாற்போல் இருந்தது. அது ரூ. 5220-ல் இருந்து ரூ. 9,940 ஆகவும், அதேபோல் ரூ. 13 ஆயிரத்திலிருந்து ரூ. 23,790 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி நகர பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய ரூ. 20.38 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் நடக்கும். இவ்வாறு முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஒத்திவைப்பு
முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி முடித்த பிறகு பேரவை கூட்டத்தை ஆகஸ்ட் 5ஆம் தேதி திங்கட்கிழமைக்கு பேரவை தலைவர் செல்வம் ஒத்திவைத்தார்.
இடைவிடாமல் போராடி வென்றோம் : ஆர்.ராஜாங்கம்
இலவச அரிசி, மானிய விலையில் சர்க்கரை, கோதுமை, பருப்பு, எண்ணெய் வழங்கப்படும் என்று புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவித்திருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் கூறியுள்ளார்.
“புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளைத் திறந்து அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களை குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசை வலியுறுத்தியது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கிய போராட்டம், இந்த ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி மீண்டும் துவங்கி மார்ச் மாதம் வரை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மக்களைத் திரட்டி ஆட்சியாளர்களை வலியுறுத்தி இடைவிடாது நடத்திய போராட்டத்தினால் இலவச அரிசி, மானிய விலையில் சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகிய பொருட்கள் வழங்கப்படும் என்று புதுச்சேரி மாநில பட்ஜெட்டில் முதல்வர் என்.ரங்கசாமி அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு மார்க்சிஸ்ட் கட்சியின் 18 மாதங்கள் இடைவெளி இல்லாது நடைபெற்ற போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் வைக்கின்ற கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் தொடர்ந்து செயல்படுத்த முன்வர வேண்டும்” என்று ஆர்.ராஜாங்கம் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.