districts

img

சரிவிகித ஊட்டச்சத்து உணவு நிறுத்தம் புதுச்சேரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, நவ. 29- புதுச்சேரி விடுதி மாணவர்களுக்கு சரிவிகித ஊட்டச்சத்து உணவு வழங்காததை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகம் முன்பு செவ்வாயன்று (நவ. 29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளி மாணவர்களுக்கான விடுதி யில், வாரத்தில் மூன்று நாட்களுக்கு முட்டை, இறைச்சியுடன் சரி விகித ஊட்டச்சத்து உணவை வழங்க வேண்டும். விடுதியில் உள்ள அனைத்து கழிவறைகளையும் சீர மைக்க வேண்டும், பள்ளி மாண வர்களுக்கான இலவச பேருந்தை உடனடியாக இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பிரதேச செயலாளர் சரவணன், மாணவர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் தமிழ் மாநில இணைச் செய லாளர் ஜி.ராமசாமி, மூத்த தொழிற்சங்க தலைவர் தா.முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் பெருமாள், பிரதேச தலைவர் கொளஞ்சியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.