districts

தீண்டாமை கொடுமையை எதிர்த்த வாலிபர் சங்கத்தினர் கைது

மயிலாடுதுறை, ஜன.21-  புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட தீண்டாமை கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்நிலையில், இந்த நீர்த்தேக்கத் தொட்டியை இடிக்கும் போராட்ட த்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  அறிவித்திருந்தது.  இந்நிலையில், சனிக்கிழமை போராட் டத்திற்கு புறப்பட தயாராக இருந்த  வாலிபர் சங்கத்தினரை மயிலாடுதுறை காவல்துறையினர் வீடு புகுந்து கைது செய்துள்ளதை வாலிபர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டக்குழு வன்மை யாக கண்டிக்கிறது.  இது தொடர்பாக சங்கத்தின் மாவக் டக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை யில், ‘‘புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் சாதிய வன்மத்தோடு குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளிகளை, கைது  செய்யக்கோரியும் மலம் கலந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வலியு றுத்தியும் ஜனவரி 21 அன்று வாலிபர்  சங்கம் சார்பில் தண்ணீர் தொட்டி இடிப்பு  போராட்டம் அறிவிக்கப்பட்டது.  இதுவரை குற்றவாளிகளை கைது செய்யாத  காவல்துறை, தீண்டாமை கொடுமையை எதிர்த்து போராடும் வாலிபர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளை   வீடுபுகுந்து கைது செய்துள்ளது.  காவல்துறையின் ஜனநாயக விரோதமான இந்நடவடிக்கையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டக்குழு வன்மை யாக கண்டிக்கிறது. வேங்கைவயல் குற்றவாளிகளை தமிழ்நாடு காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும், கைது செய்யப்பட்ட வாலி பர் சங்கத்தினரை உடனடியாக விடு தலை செய்ய வேண்டும்’’ என குறிப் பிடப்பட்டுள்ளது.