districts

img

‘முடிவெடுக்கும் இடத்திற்கு பெண்கள் வரவேண்டும்’ எஸ்.கே.பொன்னுத்தாய் பேச்சு

புதுக்கோட்டை, மார்ச் 11-  அனைத்து இடங்களிலும் முடி வெடுக்கும் அதிகாரம் பெண் களுக்கு வரவேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் பேசி யுள்ளார். சிஐடியு, தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்துவகை மாற்றுத் திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான நலச் சங்கம் ஆகிய  அமைப்புகள் இணைந்து புதுக் கோட்டையில் சனிக்கிழமையன்று உலக மகளில் தினவிழா பேரணி  மற்றும் கருத்தரங்கம் நடைபெற் றது.  கருத்தரங்கில் மாதர் சங்க  மாநிலச் செயலாளர் எஸ்.கே. பொன்னுத்தாய் பேசுகை யில், ‘‘ஏழை வீட்டுக் குழந்தை களுக்கான அங்கன்வாடியில் நாளொன்றுக்கு குழந்தைகளின் உணவுக்காக அரசு 80 பைசா வீதம் வழங்குகப்படுகிறது. இதை உயர்த்தித் தருமாறும், அதன் ஊழி யர்களுக்கு காலமுறை ஊதியம்  வழங்கவும் கோரி 30 ஆண்டுகளுக் கும் மேலாக தொடர்ந்து வலி யுறுத்தியும் கோரிக்கை நிறைவேற வில்லை. வராக்கடன் என்கிற பெய ரில் 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி  அளவிற்கு கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு கடன் தள்ளுபடி செய்யும்  ஒன்றிய அரசு, ஏழைக் குழந்தை களைப் பற்றி கவலைப்படவில்லை. நாம் 106-ஆவது சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டா டிக்கொண்டு இருக்கும் வேளை யிலும் பெண்களுக்கான உரிமை கள் கிடைத்தபாடில்லை. நாடாளு மன்றம், சட்டமன்றம் உள்ளிட்ட அனைத்திலும் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வேண்  டும். முடிவெடுக்கும் இடத்தில் பெண்கள் இருக்க வேண்டும். சம  வேலைக்கு, சம ஊதியம் என்பது  கிடையாது. கேரளாவில் சம  வேலைக்கு சமஊதியம் வழங்கும்  போது தமிழ்நாட்டில் ஏன் சாத்தி யம் இல்லை’’ என்றார். கருத்தரங்கிற்கு சிஐடியு மாநி லச் செயலாளர் எஸ்.தேவமணி, விவசாயத் தொழிலாளர் சங்க  மாவட்டச் செயலாளர் டி.சலோமி,  மாதர் சங்க மாவட்டச் செயலாளர்  பி.சுசிலா ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாயத் தொழிலா ளர் சங்க மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., சிஐடியு மாநில துணைத் தலைவர் எம். மகாலெட்சுமி ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னச்சாமி, விதொச மாவட்டப் பொருளாளர் கே.சண்முகம், சிஐடியு மாவட்ட  துணைச் செயலாளர் சி.மாரிக் கண்ணு, வாலிபர் சங்க மாவட்டத்  தலைவர் ஆர்.மகாதீர், மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்ட துணைத்  தலைவர் ஜி.கிரிஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக புதுக்கோட்டை பேருந்து நிலை யத்திலிருந்து கருத்தரங்கம் நடை பெற்ற கே.எம்.மஹால் வரை பேரணி நடைபெற்றது.
திருவாரூர் 
திருவாரூர் கடைவீதி அருகே உள்ள பள்ளிவாசலில் இருந்து துவங்கிய பேரணிக்கு மாதர் சங்க  மாவட்டச் செயலாளர் பா.கோமதி, உழைக்கும் பெண்கள் மாவட்ட கன்வினர் இரா.மாலதி ஆகியோர் தலைமை வகித்தனர். இதனை தொடர்ந்து நடை பெற்ற கருத்தரங்கில் சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம். மகாலட்சுமி, மாநில செயலாளர் எஸ்.தேவமணி, மாவட்டச் செய லாளர் டி.முருகையன், தலைவர் எம்.கே.என்.அனிபா, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி, விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் பி. கந்தசாமி, மாதர் சங்க மாநிலப் பொருளாளர் வி.பிரமிளா, வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சலாவுதின், தலைவர் எ.கே.வேலவன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.