districts

img

எதிர்காலக் கல்வியைச் சீரழிக்கும் கல்விக்கொள்கையை திரும்பப் பெறுக!

பொன்னமராவதி, ஜூலை 21- தேசத்தின் எதிர்காலக் கல்வி யைச் சீரழிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 30  அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தி பொன்னமராவதி வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டாரத் தலைவர் கொ.பழனியாண்டி தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் சு.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் செ.அழகு, கல்வி மாவட்டச் செயலாளர் பெ. புவியரசு, மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் பழ.தேவேந்திரன் உள்  ளிட்டோர் விளக்கிப் பேசினர். நிர்வாகிகள் மணிக்குமார், தேவ குமார், மகாலிங்கம், மீனாட்சி, காத்  தாயி, மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், தேசத்தின் எதிர்காலக் கல்வியைச் சீரழிக்கும் தேசியக் கல்விக்கொள்கை 2020 ஐ திரும்பப்பெற வேண்டும், புதிய  ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஒன்  றிய அரசுக்கு இணையான ஊதி யத்தை திரும்பத் தர வேண்டும், ஊக்க ஊதியம், சரண்டர், டிஏ  போன்ற பறிக்கப்பட்ட சலுகை களை உடன் வழங்கிட வேண்டும்,  ஆசிரியர்களுக்கு மன உளைச் சலை ஏற்படுத்தும் இஎம்ஐஎஸ் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும்  என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தப்பட்டன.