பொன்னமராவதி, ஜூன் 26 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி அருகே நகரப்பட்டியைச் சுற்றி யுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இத னால் மின்சாரம் அடிக்கடி தடைபட்ட தையடுத்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பின்னர் விவசாயிகளின் கோரிக் கையை ஏற்று, நகரப்பட்டியில் சுமார் ரூ.15 கோடி திட்ட மதிப்பீட்டில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது. அதன் பணிகள் கடந்த ஆண்டே முடிவ டைந்த நிலையில், துணை மின் நிலை யத்திற்கு தேவையான சில மின் சாதனங் கள் வரவேண்டி உள்ளதாக கூறப்படு கிறது. துணை மின் நிலைய பணிகள் முடிந்தும் திறக்கப்படாததால், இப்பகுதி விவசாயிகள் மின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த துணை மின் நிலையம் திறக்கப் பட்டால் பாலக்குறிச்சி, கலிங்கிபட்டி, நகரப்பட்டி அம்மன்குறிச்சி, ஆலவயல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊராட்சி களைச் சேர்ந்த பொதுமக்களும் விவசா யிகளும் பயன் பெறுவர். உடனடியாக தமிழக அரசு துணை மின் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.