பொன்னமராவதி, ஏப்.27- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதி அருகே உள்ள ஏனாதி கிராமத்தில் ஜெய லட்சுமி என்பவர் வீடு கட்டுவதற்காக, கட்டு மான பணியாளர்களை கொண்டு அஸ்திவா ரம் தோண்டிய போது உடைந்த மண் பானை யில் தங்க காசுகள் இருந்துள்ளன. இதனையடுத்து கட்டுமான பணியாளர் கள் அதை ஜெயலட்சுமியிடம் ஒப்படைத்த நிலையில், அவர் உடனடியாக வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை யடுத்து, பொன்னமராவதி வட்டாட்சியர் ஜெய பாரதி தலைமையிலான வருவாய்த் துறையி னர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற் கொண்டனர். பின்னர் ஜெயலட்சுமி வட்டாட்சியர் அலுவ லகத்திற்கு சென்று மண்ணுக்குள் இருந்து கிடைத்த உடைந்த பானையுடன் 63 கிராம் எடை கொண்ட 16 தங்க நாணயங்களை ஒப்ப டைத்தார். வருவாய் துறையினர் ஜெய லட்சுமியை பாராட்டி சால்வை அணிவித்த னர். பின்னர் அந்த 16 தங்க நாணயத்தையும் கருவூலத்தில் ஒப்படைக்க போவதாக தெரி வித்தனர். மேலும் இது முகலாயர் காலத்து நாணயமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.