புதுக்கோட்டை, மார்ச் 13- புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் மனிதக் கழிவு கலக் கப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி யை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் திங்கள்கிழமை உடைக்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் தலித் மக்களுக்கான குடி நீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் கடந்த டிச.26 அன்று தெரியவந் தது. சம்பவம் நடந்த அன்று முதல் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை மற்றும் அர சியல் கட்சியினர் தலையிட்டு குற்றவாளி களை கைதுசெய்ய வலியுறுத்தி வரு கின்றனர். இந்நிலையில், மனிதக் கழிவு கலக் கப்பட்ட தண்ணீர்த் தொட்டி அவமானச் சின்னம் எனக் குறிப்பிட்டு அதை இடிப்ப தற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலர் திரு வாடானை முருகானந்தம், புதுச்சேரி மாநில இளைஞரணித் தலைவர் அருள்ஒளி, சேலம் மாவட்ட மாணவரணி கவியரசன், சிவ கங்கை நகரச் செயலர் அஜித் செல்வராஜ் ஆகியோர் திங்கள்கிழமை காலை சம்மட்டி யுடன் தண்ணீர்த் தொட்டியின் மீது ஏறி னர். தொட்டியை உடைக்க முயற்சித்த அவர்கள், தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். புதுக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் ராகவி தலை மையிலான போலீசார் சமானதானப்படுத்தி கீழே இறக்கி, அவர்களைக் கைது செய்த னர்.
இறையூர் மக்கள் மறியல்
வெளியூரில் இருந்து வருவோர் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வரு வதாகவும், எனவே, குற்றவாளிகளை விரை வில் கைது செய்ய வேண்டும் என வலி யுறுத்தியும் இறையூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர் களையும் கலைந்து போகச் செய்தனர்.