districts

img

வேங்கைவயல் : பட்டியலின மக்களை துன்புறுத்தக்கூடாது: பி.டில்லிபாபு

புதுக்கோட்டை, மார்ச் 19 -  புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் சம்பவத்தில் விசாரணை என்ற பெய ரில் பட்டியலின மக்களை மனரீதியாக துன்புறுதக்கூடாது என்றார் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு. பட்டியலின மக்களுக்கான குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தொடர்பாக மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.அன்பு மணவாளன். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். பொன்னுச்சாமி ஆகியோருடன் ஞாயிற்றுக் கிழமை வேங்கைவயல் கிராமத்திற்குச் சென்று ஆய்வு நடத்திய பின் பி.டில்லிபாபு வெளியிட்டுள்ள அறிக்கை:- வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டி யில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம்  நடந்து மூன்று மாதமாகியும் குற்றவாளிகள்  கைதுசெய்யப்படவில்லை. குற்றவாளி களை விரைவில் கைதுசெய்வதற்கு மாறாக பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களிடமே விசாரணை என்ற பெயரில், அவர்களை மன ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது கண்டிக்கத்தக்கது. சம்பவம் நடந்த பிறகும் கூட வேங்கை வயல் மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை. மயானத்திற்குக் கூட செல்ல முடியாத அளவுக்கு சாலைகள் மிகவும் பழுதடை ந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டிக்கொடுக்கப்பட்ட காலனி வீடுகள் மிகவும் சேதடைந்துள்ளது. இவைகளை உடனடியாக அரசு சரி செய்ய வேண்டும். பட்டியலின மக்களுக்கு மீண்டும் தனியாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி என்பதை அவர்கள் ஏற்கவில்லை. அனைத்துப் பகுதி மக்களுக்கும் பொது வான குடிநீர் இணைப்பையே அவர்கள் விரும்புகின்றனர்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும். அவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாக சமூகத்தில் வலம்வர உரிய நடவடிகைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.