districts

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை, ஆக.31 - புதுக்கோட்டை நகரில் நிலவி  வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என நகர்மன்றக்  கூட்டத்தில் உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். புதுக்கோட்டை நகர்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. கூட்டத்துக்கு, நகர்மன்றத் தலைவர் செ.திலகவதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் மு. லியாகத்அலி, ஆணையர் சே. நாக ராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பலரும் தங்கள் வார்டுகளில் நிலவி வரும் குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு  காண வேண்டும் என வலியுறுத்தி னர். 27 ஆவது வார்டு உறுப்பினர் ச.  மூர்த்தி பேசுகையில், புதுக்கோட்டை  நகரில் கீழ 2 ஆம் வீதியில் எப்போ தும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. வணிக நிறு வனத்தினர் தங்களின் கடைகளை சாலைகளை ஆக்கிரமித்து வைத்துள் ளனர். இதேபோல நகரின் பல பகுதி களிலும் போக்குவரத்து நெரிசல் கடு மையாக இருக்கிறது. ஆக்கிரமிப்பு களை பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 5 ஆவது மண்டலத்தில் 35 துப்புர வுப் பணியாளர்கள் இருந்தும், 24 பேர் மட்டுமே வார்டுகளில் பணியில் இருக்கின்றனர். மீதமுள்ளவர்கள் உயர் அலுவலர்களின் வீடுகளில் மாற்றுப் பணியில் இருக்கிறார்கள். வார்டுகளில் பணியாற்ற ஆட்கள் இல்லை. இதை சரி செய்ய வேண்டும்.  கீழராஜவீதியில் 12 மின்விளக்குகள் எரியவில்லை என்றார். 9 ஆவது வார்டு உறுப்பினர் செந் தாமரை பாலு பேசுகையில், நகரில்  குடிநீர்ப் பிரச்சனைகளும், தூய்மைப்  பணிகளும் கடந்த 6 மாதங்களாக தீர்க்க முடியாத நிலையில் உள்ளன.  இவற்றை சரி செய்ய நகராட்சி நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  உறுப்பினர்களின் கோரிக்கை களை படிப்படியாக தீர்க்க நடவ டிக்கை எடுக்கப்படும் என நகர்மன்றத்  தலைவர் செ.திலகவதி தெரிவித்தார்.