districts

img

கவிஞர் ஜீ.வெங்கட்ராமனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

அறந்தாங்கி,  ஜூலை 1 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த கவிஞர் ஜீவி என்கிற  ஜீ.வெங்கட்ராமன் தமிழ்நாடு பொது சுகாதார  துறையில் 38 ஆண்டுகள் பணியாற்றி, ‘தமிழ் செம்மல் விருது’ பெற்றிருக்கிறார். மாவட்ட நல கல்வியாள ராகவும், தமிழ்நாடு பொது சுகாதார துறை அலுவலர் சங்க மாநில தலைவராகவும் பணியாற்றி ஜூன் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். பட்டிமன்ற பேச்சாளரான கவிஞர் ஜீவி என்ற ஜீ. வெங்கட்ராமனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா அறந் தாங்கி ராஜேஸ்வரி மஹாலில் நடைபெற்றது. அரசு பணியாளர்கள், தொழிற் சங்க நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் கவிஞர் ஜீவிக்கு சால்வை அணிவித்து, புத்தகங்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

;