districts

img

மின்னல் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் நிவாரணம்: அமைச்சர் வழங்கினார்

புதுக்கோட்டை, நவ.16 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடை யார்கோவில் அருகே மின்னல் தாக்கி உயி ரிழந்த 3 பேரின் வாரிசுதாரர்களிடம், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பிலான காசோலைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதன்கிழமை வழங்  கினார்.  இதுகுறித்து அமைச்சர் தெரிவிக்கை யில், “ஆவுடையார்கோவிலை அடுத்த பறையத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பழ னிச்சாமியின் குழந்தைகள் தென்னரசு (16),  காளீஸ்வரி (15), பழனிச்சாமியின் சகோதரர் இளையராஜா (38) ஆகியோர் திங்கள் கிழமை மாலை பள்ளியிலிருந்து பறை யத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தை கேள்விப்பட்ட முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக அரசின்  நிவாரண உதவிகளை வழங்க அறிவுறுத்தி னார்.  அதன்படி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு  சான்றிதழ் உள்ளிட்டவைகள் 24 மணி நேரத்திலேயே வழங்கப்பட்டன. மேலும், முதலமைச்சரின் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் வாரிசு களுக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.12 லட்  சத்திற்கான காசோலைகள் வழங்கி, ஆறு தல் தெரிவிக்கப்பட்டது” என்றார்.