புதுக்கோட்டை, ஜன.5- சமூகப் பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் யுனைடெட் வே ஆப் சென்னை நிறுவனத்திடமிருந்து பெறப் பட்ட நிதியுதவியிலிருந்து, கொரோனாவால் கணவரை இழந்தவர்களுக்கு வாழ்வா தார உதவி மற்றும் கொரோ னாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்லூரி கல்வி நிதி உதவிகளை புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு புதனன்று வழங் கினார். கொரோனாவால் கண வரை இழந்த 10 நபர்களுக்கு மின்மோட்டாருடன் இணைந்த தையல் இயந்திரம், பெரிய கிரைண்டர், கறவைமாடு, தள்ளுவண்டிக் கடை, ஆடு அல்லது மாடு வாங்குவதற் காக ரூ.3,19,500 மதிப்பீட்டி லான உதவித் தொகை களும், பெற்றோரை இழந்த 7 குழந்தைகளுக்கு ரூ.1,90, 420 மதிப்பீட்டில் கல்வி உத வித் தொகைகளும் என மொத்தம் 17 நபர்களுக்கு ரூ.5,09,920 மதிப்பீட்டில் உத வித் தொகைகள் வழங்கப் பட்டன. நிகழ்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரா.அனிதா, யுனை டெட் வே ஆப் சென்னை திட்ட அலுவலர் ஜெரசலோ வினோத், யுனைடெட் வே ஆப் சென்னை உதவி மேலா ளர் (திட்டங்கள்) அபிராமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.