districts

ஸ்கேன் எடுக்க முடியாமல் அவதிப்படும் பொதுமக்கள் மணமேல்குடி ஒன்றிய குழு கூட்டத்தில் புகார்

அறந்தாங்கி, ஏப்.28-  புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய பெருந்தலை வர் இ.ஏ.கார்த்திகேயன் தலை மையில் நடைபெற்றது.  இதில், ஒன்றிய துணைத் தலைவர் சீனியார், வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் அரச மணி, வீரப்பன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.  கிருஷ்ணாஜிப்பட்டினம் ஒன்றிய குழு உறுப்பினர் பேசுகை யில், சிங்கவனம் ஆரம்ப சுகா தார நிலையத்தில் ஸ்கேன் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக் குள்ளாகினர். இதனை சரி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.  துணைத்தலைவர் பேசு கையில், ஆபத்தை விளைவிக் கக்கூடிய மின்சாரக் கம்பிகள் பல இடங்களிலும் தாழ்வாக தொங்கிக் கொண்டு உள்ளது. இதை மின்சார வாரியம் சரி செய்ய வேண்டும் என்று கூறினார்.  ஒன்றிய குழு தலைவர் இ.ஏ.கார்த்திகேயன் பேசும் போது, பொதுமக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருந்து அரசிடம் தேவையான நிதி பெற்று மண மேல்குடி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்து தரப்படும் என்றார்.

;