புதுக்கோட்டை, ஜன.8 - இந்த ஆண்டின் முதல் ஜல்லிக் கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட் டம் தச்சன்குறிச்சியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் 17 காளை களை அடக்கிய வீரருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் பாரம்பரிய விளை யாட்டான ஜல்லிக்கட்டுக்கு மாநிலத்தி லேயே அதிக வாடிவாசல்களை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை. இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக் கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்து தச்சன்குறிச்சியில் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது. ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் கொடிய சைத்து தொடங்கி வைத்தனர். மாடுபிடி வீரர்களின் உறுதிமொ ழிக்குப் பிறகு போட்டி நடைபெற்றது. மருத்துவப் பரிசோதனைக்கு உட்ப டுத்தப்பட்ட 585 காளைகளும், 150 மாடுபிடி வீரர்களும் களமிறக்கப்பட்ட னர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர் களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 17 காளைகளை அடக்கிய புதுக் கோட்டை மாவட்டம் தென்னூரைச் சேர்ந்த யோகேஸ் முதல் பரிசையும், 15 காளைகளை அடக்கிய ஈரோடு மாவட் டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் இரண்டாம் பரிசை யும் பெற்றனர். காளைகளில், நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடிய தஞ்சாவூர் மாவட்டம் மருதக்குடியைச் சேர்ந்த மாரிதாஸின் காளை முதல் பரிசைப் பெற்றது. காளைகள் முட்டியதில் 71 பேர் காயமடைந்தனர். அங்கு முகாமிட்டி ருந்த மருத்துவக் குழுவினர் அவர்க ளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த 21 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பி னர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வ கோட்டை), வை.முத்துராஜா (புதுக் கோட்டை), திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டி யன், மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, வருவாய் கோட்டாட்சியர் முரு கேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.