புதுக்கோட்டை, நவ.11 - தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் மூலம் 2022-23 ஆம் நிதி ஆண்டிற்கு தொழில் முனைவோ ரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தி டும் வகையில் ஆவின் பாலகம் அமைப்ப தற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கூறுகையில், “இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்ப தாரர் ஆவின் நிறுவனத்தின் விதிமுறை களுக்கு உட்பட்டு கடை அமைத்து ஆவின் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ய வேண்டும். தொழில் செய்ய தாட்கோ மூலம் மின் வாக னம், உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற மின் உபகரணங்கள் கொள்முதல் செய்ய ஒருவருக்கு ரூ.3 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் மானியமாக ரூ.90 ஆயிரம் வழங் கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். வயது 18 முதல் 65-க்குள் இருக்க வேண்டும். தேர்ந்தெ டுக்கப்படும் கடையின் இடம் குறைந்த பட்சம் 100 சதுர அடியாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சொந்த, குத்தகை, வாடகைக் கட்டிடம் இருக்கலாம். அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப் பதாரர் அருகில் உள்ள மண்டல அலுவல கத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். வணிகத்தை தொடங்குவதற்கு முன்பு, விண்ணப்பதாரர் நிறுவனத்திலிருந்து உணவு உரிமத்தைப் பெற வேண்டும். அடை யாள பலகை, உட்புற வடிவமைப்பு போன்ற வற்றை விண்ணப்பதாரரே மேற்கொள்ள வேண்டும். குளிர்விப்பான் மற்றும் உறை விப்பானின் குறைந்தபட்ச கொள்ளளவு 200 லிட்டராக இருக்க வேண்டும். மேலும் இது தொடர்பான விவரங்களை மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, காட்டு புதுகுளம், பஞ்சாயத்து யூனியன் அலு வலக சாலை புதுக்கோட்டை என்ற முகவரி யில் அல்லது 04322-221487 என்ற தொலை பேசி மூலமாக தொடர்பு கொண்டு பயன்பெற லாம்” என்றார்.