புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாணவ, மாணவியர்களால் சுமார் 250 அறிவியல் படைப்புகள் தயாரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கண்ணையன் தலைமை வகித்தார். அறந்தாங்கி காவல்துறை ஆய்வாளர் பிரேம் குமார் கண்காட்சியை துவக்கி வைத்தார். காவல் உதவி ஆய்வாளர் சாமிக்கண்ணு, அறந்தாங்கி ரோட்டரி சங்க தலைவர் பிரேம் குமார், நகர் மன்ற உறுப்பினரும், வருங்கால ரோட்டரி தலைவர் செந்தில்குமார், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் வீராசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.