districts

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்: நிர்வாகிகள் தேர்வு

புதுக்கோட்டை, ஜூலை 10 - தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளின் மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புக் கூட்டம் சனிக்கிழமை அந்தந்தப் பள்ளிகளில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அரையப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.ஆர்.வடிவேல் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் துரை.மலர்விழி, பள்ளித் தலைமை ஆசிரியர் பி. பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டப்  பொறுப்பாளராக ஆசிரியர் பயிற்றுநர் மணி செயல்பட்டார். தலைவராக ம.ராஜாத்தி, துணைத்  தலைவராக கா.செல்வமணி உள்ளிட்ட 20 பேர்  கொண்ட பள்ளியின் மேலாண்மைக் குழு தேர்வு  செய்யப்பட்டது.
மணமேல்குடி 
மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 16  அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி களில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்ட மைப்பு உறுப்பினர்கள் தேர்வு கூட்டம் நடைபெற் றது. பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத் தலைவர், கல்வியாளர், வார்டு உறுப்பி னர்கள் மற்றும் பெற்றோர்கள் உறுப்பினர் களாக தேர்வு செய்யப்பட்டனர். அரசு உயர் நிலைப் பள்ளிகள் புதுக்குடி, பொன்னகரம், கோலேந்திரம், கோபாலபுரம், கோட்டைப்பட்டி னம், ஜெகதாப்பட்டினம், இடையாத்திமங்கலம், கிருஷ்ணாஜிபட்டினம் ஆகிய உயர் நிலைப் பள்ளிகளிலும், மணமேல்குடி ஆண்கள், மண மேல்குடி பெண்கள், கோட்டைப்பட்டினம், பெரு மருதூர், அம்பலவானணேந்தல், கட்டுமாவடி மற்றும் அம்மாபட்டினம் ஆகிய மேல்நிலைப் பள்ளிகளிலும் மறுகட்டமைப்பு உறுப்பினர்கள் தேர்வு கூட்டம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் தண்டலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் காமராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி, ஊராட்சி மன்ற ஒன்றிய கவுன்சிலர் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து தலைவராக சரளா, துணைத் தலைவ ராக ரமேஷ் உட்பட 15 பேர் தேர்வு செய்யப்பட்ட னர்.  ஜெயங்கொண்டம் ஒன்றியம் தேவாமங்க லம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் நடந்த  கூட்டத்திற்கு ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை  வகித்தார். அரசின் சார்பில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தேர்தல் பார்வை அலுவலராக நியமிக்கப்பட்ட புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரி யர் செங்குட்டுவன், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பி னர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.