புதுக்கோட்டை, ஜூலை 26 - புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாயன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலை மையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எஸ்.பொன்னுச்சாமி பேசுகையில், “மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாசனக் குளங்களுக்குச் செல்லும் வரத்து வாரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கறம்பக்குடி ஒன்றியம் தீத்தான் விடுதியில் உள்ள புதுக்குளம் நிரம்பிய பிறகு ஆச்சிக்குளம், மானிய புதுக்குளம், செட்டியார் ஊரணி, கணக்கர்குளம், மேம் பத்திக்குளம், கூத்தாளம்மன்குளம், பெரிய குளம், நொச்சியோடைகுளம், தத்துவான் குளம், குத்தூஸ்குளம், நெடுங்குளம் வரை வரத்து வாய்க்கால் உள்ளது. குழந்திரான்பட்டு, தீத்தான்விடுதி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட மக்கள் பயன்பெ றும் இந்த வரத்து வாய்க்காலை சில தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிர மிப்பை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குழந்திரான்பட்டு ஊராட்சியில் உள்ள நொச்சி ஓடை பாசனக்குளத்தை காலம் காலமாக விவசாயிகள் சாகுபடிக்காக பயன் படுத்தி வருகின்றனர். அந்த குளத்தின் நடுவே சாலை அமைக்கும் முயற்சியை விவசாயி கள், அதிகாரிகள் மூலம் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், மேற்படி குளத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.