புதுக்கோட்டை, ஜூலை 10- வரலாறு காணாத வகையில் உயர்ந்து உள்ள சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டு மென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை ஒன்றிய 6 ஆவது ஒன்றிய மாநாடு புதுக்கோட்டை யில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவர் சாவித்திரி தலைமை வகித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து மாவட்டத் தலைவர் பி.சுசீலா பேசி னார். ஒன்றியச் செயலாளர் ஆர்.சுபாஷினி வேலை அறிக்கை வாசித்தார். பொருளா ளர் எஸ்.பாண்டிச்செல்வி வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டில் தலைவராக அமுதா, செயலா ளராக சுபாஷினி, பொருளாளராக முத்து லெட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் டி.சலோமி நிறைவுரையாற்றினார். வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும். நூறுநாள் வேலையில் ஆன்-லைன் பதிவை ரத்து செய்ய வேண்டும். உரையநேரி காலனி மக்களுக்கு குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்து கொடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன் முறையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.