districts

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா கல்லூரி மாணவர்களுக்கு கலை, இலக்கியப் போட்டிகள்

புதுக்கோட்டை, ஜூலை 8 - புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன.  இதுகுறித்து புத்தகத் திருவிழா ஒருங்கி ணைப்பாளர்கள் தெரிவித்துள்ள விபரம்: 5 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திரு விழா ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை  புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறு கிறது. இதனையொட்டி கல்லூரி மாணவர்க ளுக்கு கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் குறும்படப் போட்டி கள் நடைபெறவுள்ளன. குறும்படப் போட்டி தவிர இதரப் போட்டிகளுக்கான தலைப்பு போட்டி நடைபெறும் நேரத்திற்கு ஒரு மணி  நேரம் முன்பாக அறிவிக்கப்படும். போட்டி களுக்கான தலைப்பு புத்தகம், புத்தக வாசிப்பு, அறிவுத்தேடல் ஆகிய பொருளை மையமாகக் கொண்டு அறிவிக்கப்படும். 23.7.2022 (சனிக்கிழமை) சனிக்கிழமை காலை 10 மணிக்கு புதுக்கோட்டை கலைஞர்  கருணாநிதி அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் காலை 9 மணிக்கே  வந்துவிட வேண்டும். ஒரு போட்டியில் ஒருவர் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டி களில் கலந்து கொள்ள விரும்பும் மாண வர்கள் தங்கள் கல்வி நிறுவனத்திலிருந்து கடிதம் பெற்று வர வேண்டும். குறும்படப் போட்டி: புத்தகம், புத்தக வாசிப்பு, அறிவுத்தேடல் ஆகிய பொருளை அடிப்படையாகக் கொண்டு 5 நிமிடத்திற்கு மிகாமல் குறும்படங்களைத் தயாரித்து 94436 39397 வாட்ஸ் அப் எண்ணிற்கு 23.7.2022  அன்று மாலைக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு போட்டி ஒருங்கிணைப்பாளர் பேரா.சா.விஸ்வ நாதனை 9443639397 என்ற எண்ணில் தொடர்பு  கொள்ளலாம்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

;