districts

img

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி

பொன்னமராவதி, ஜூலை 18 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  மற்றும் ரோல்பால் ஸ்போர்ட்ஸ் அசோசி யேசன் இணைந்து புதுக்கோட்டையில் நடை பெறும் புத்தகத் திருவிழா குறித்த விழிப்பு ணர்வு ஸ்கேட்டிங் பேரணியை நடத்தின. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் எம்.முத்துக்குமார் தலைமை வகித்தார்.   பொன்னமராவதி காந்தி  சிலையிலிருந்து புத்தகத் திருவிழா குறித்த  பதாகைகளுடன் பள்ளி மாணவ-மாணவி யரின் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது. பேரணியானது, அண்ணா சாலை, பேருந்து நிலையம் வழியாக சென்று  காவல் நிலையம் அருகே நிறைவுற்றது. அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத்  தலைவர் சதாசிவம், ஒன்றியத் தலைவர்  அறிவுடைநம்பி, பொருளாளர் பிரபு, விஏஓ  ரமேஷ், ரோல்பால் ஸ்போர்ட்ஸ் அசோசியே சன் நிர்வாகிகள் சுப்புராஜ், ஹரி ஆகியோர் பங்கேற்றனர்.