districts

img

புதுக்கோட்டையில் தீக்கதிர் சந்தா தொகை ரூ.2.18 லட்சம் ஒப்படைப்பு

புதுக்கோட்டை, ஆக.18 - புதுக்கோட்டை மாவட்டத்தில் 145 தீக்கதிர் சந்தாக்களுக்கான தொகை ரூபாய் 2 லட்சத்து 18 ஆயிரத்து 100  வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரவை யில் ஒப்படைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை, அறந்தாங்கி ஆகிய இடங்க ளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய, மாநிலக்குழு  முடிவுகள் விளக்கப் பேரவை மற்றும் தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைக்கும் பேரவை வெள்ளிக்கிழமை நடை பெற்றது.

கந்தர்வகோட்டையில், கந்தர்வ கோட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல், அறந்தாங்கியில், அறந்தாங்கி ஒன்றியச் செயலாளர் என்.நாராயணமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். 

மத்திய, மாநிலக்குழு முடிவுகளை விளக்கி கந்தர்வகோட்டையில் மாநிலக்  குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., அறந்தாங்கியில் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் ஆகி யோர் உரையாற்றினர். அவர்களிடம் ஒரு ஐந்தாண்டு, 103 ஆண்டு, 21 அரை யாண்டு, 20 தினசரி என 145 சந்தாக்களுக் கான தொகை ரூ.2,18,100 ஒப்படைக்கப் பட்டது.

பேரவைகளில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், த.அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயணன், ஒன்றியச் செயலாளர்கள் என்.நாராய ணமூர்த்தி, பி.வீரமுத்து, ஜி.பன்னீர் செல்வன், எஸ்.கலைச்செல்வன், என். சக்திவேல், எஸ்.மணிவண்ணன், காளி தாஸ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி. சுப்பிரமணியன், தென்றல் கருப்பையா,  எம்.பாலசுந்தரமூர்த்தி, கே.தங்கராசு, கே.தங்கராசு, துரை.அரிபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தீக்கதிர் முகவர்களாக பல ஆண்டு கள் சிறப்பாக பணியாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.