districts

img

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: அனைத்துப் பள்ளிகளிலும் வாசிப்பு இயக்கம் மாவட்ட ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை, ஜூன் 16-  புதுக்கோட்டை புத்தகத் திரு விழாவை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே நாளில் புத்தக வாசிப்பு இயக்கம் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட நிர்வா கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 5-ஆவது புத்தகத் திருவிழாவை நடத் துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதனன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்ற வளா கத்தில் 5வது புத்தகத் திருவிழா நடத்தப்படவுள்ளது. இதில், தமிழ கத்தில் உள்ள புகழ்பெற்ற புத்தகப் பதிப்பகங்கள் தங்களுடைய புத்த கங்களை விற்பனை மற்றும் காட்சிப் படுத்துவதற்காக 70 முதல் 80 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. மக்களிடையே வாசிப்பு பழக் கத்தை ஏற்படுத்துவதற்காக புத்தகத் திருவிழா குறித்து போதுமான அள வில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புத்தகத் திருவிழாவிற்கு அதிகளவில் வருகைதரும் பொது மக்களின் வசதிக்காக போதுமான அளவில் கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். மேலும், விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களிடையே புத்தக  வாசிப்பின் அவசியம் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி யர்களின் கலை நிகழ்ச்சிகளுடன், அறிஞர்களின் சொற்பொழிவும் நடைபெறவுள்ளது.

மாணவர்களி டையே வாசிப்பு ஆர்வத்தை ஏற் படுத்தும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே நாளில் புத்தக வாசிப்பு திருவிழா நடத்தவும் உத்தே சிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்துத் துறை அலு வலர்களும், புதுக்கோட்டை புத்த கத் திருவிழா ஒருங்கிணைப்பா ளர்களும் சிறப்பான முறையில் செயல்பட்டு புத்தகத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி புதுக் கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்றார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் பெ.வே.சரவணன் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு), ஆர்.ரம்யாதேவி (காவேரி-வைகை-குண்டாறு), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் செ.மணிவண்ணன், புதுக் கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், புத்தகத் திரு விழா ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம்மூர்த்தி, நா.முத்துநிலவன், அ.மணவாளன், வீரமுத்து, விமலா, முத்துக்குமார் உள்ளிட்டேர் பங் கேற்றனர்.