districts

img

சிகரம் இலவச நீட் பயிற்சி மையத்தில் வகுப்புகள் தொடக்கம்

அறந்தாங்கி, ஏப்.10-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யில், அறந்தாங்கி இந்திய மருத்துவ கழகம்  மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு இணைந்து நடத்தும் சிகரம் இலவச  நீட் பயிற்சி மையத்தின் 6-ஆம் ஆண்டு வகுப்பு கள் தொடங்கின.  முதல் நாளில் 70 மாணவர்கள் வகுப்பில்  சேர்ந்தனர். அவர்களுக்கான வகுப்புகள் அறந் தாங்கி ஐஎம்ஏ அரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு, அறந்தாங்கி இந்திய மருத்துவ  கழக முன்னாள் தலைவர் டாக்டர் லெட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். திசைகள்  அமைப்பின் தலைவர் மரு.தெட்சிணாமூர்த்தி, பொருளாளர் முகமது முபாரக், ஐஎம்ஏ செய லாளர் மரு.சுதர்சன், பொருளாளர் மரு.இளைய ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிகரம் மையத்தின் மூலம் இதுவரை 500 க்கும் மேற்பட்ட கிராமப்புற, அரசுப்பள்ளி  மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் 7 பேர் மருத்துவக் கல்லூரி களில் பயின்று வருகின்றனர்.