districts

img

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் அமைச்சர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள்

புதுக்கோட்டை, ஜூலை 24 - 5 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் அமைச்சர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலை ஞர்கள், கல்வியாளர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த  உள்ளனர்.  இதுகுறித்து புத்தகத் திருவிழா ஒருங்கிணைப் பாளர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:  5 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வருகிற  ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை புதுக் கோட்டை நகர்மன்ற வளாகத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அமைச் சர்கள், அதிகாரிகள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பி னர் பங்கேற்று உரைநிகழ்த்த உள்ளனர்.

தொடக்க விழா
முதல் நாளான ஜூலை 29 அன்று காலையில் நடை பெறும் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா  ராமு தலைமை வகிக்கிறார். மாவட்ட காவல் கண்காணிப் பாளர் வந்திதா பாண்டே முன்னிலை வகிக்கிறார். புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, முதல் விற்பனையைத் தொடங்கி  வைத்து சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.  இதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர். அன்று மாலை நடைபெறும் நிகழ்வில் ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன், எழுத்தாளர் நாறும் பூநாதன் ஆகியோர் இலக்கிய உரையாற்றுகின்றனர். தொடர்ந்து வரும் அடுத்தடுத்த நாட்களில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திரைக்கலைஞர் ரோகிணி, ஊடகவியலாளர் கார்த்திக் கேயன், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.பால பாரதி, அறிவியல் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ் வரன், சிறுபான்மை நல வாரியத் தலைவர் பீட்டர் அல் ஃப்போன்ஸ், பேராசிரியர் அப்துல்காதர், முனைவர் கோ.ப.நல்லசிவம், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, மேனாள் துணைவேந்தர் சொ.சுப்பையா, பத்மஸ்திரி கலைமாமணி நர்த்தகி நடராஜன், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், இல்லம் தேடிக் கல்வி திட்ட இயக்குனர் க.இளம்பகவத் உள்ளிட்டோர்.  உரையாற்றுகின்றனர்.  கவிச்சுடர் கவிதைப்பித்தன், கவிஞர் தங்கம் மூர்த்தி  ஆகியோர் தலைமையில் கவியரங்கங்களும் நடை பெற உள்ளன. நிறைவு நாளில் கலை இலக்கிய விருது களை வழங்கி நீதியரசர் சந்துரு, புத்தக விழா தொண்டர் களை கவுரவித்து ஊடகவியலாளர் கோபிநாத் ஆகி யோர் உரையாற்றுகின்றனர்.

மாணவர்களுடன் கலந்துரையாடல்
ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேலை களில் புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வரப்படும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் சிறந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். இந்நிகழ்வில் தமிழ் நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் எஸ்.தின கரன், பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

கலை நிகழ்ச்சிகள்
ஒவ்வொரு நாள் மாலையிலும் பள்ளி மாணவர் களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவர் கள் அனைவருக்கும் புத்தகப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், புத்தகத் திருவிழாவை நோக்கி வாசகர் களை ஈர்க்கும் வகையில் சிறப்பு கழிவுகள் மற்றும் பரிசுத் திட்டங்களும் அறிவிக்கப்பட உள்ளன. புத்தகத் திருவிழாவிற்கான அழைப்பிதழை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.