புதுக்கோட்டை, ஜூலை 28- புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம் மாள்சத்திரம் பகுதியைச் சேர்ந்த நரிக் குறவர் மக்களுக்கு பட்டா மாறுதல் ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு புதனன்று வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் குளத் தூர் வட்டம் வெள்ளனூர் ஊராட்சி யைச் சேர்ந்த ரெங்கம்மாள்சத்திரம் பகு தியில் வசித்துவரும் 35 நரிக்குறவர் மக்கள் தங்களது முன்னோர்கள் பெயர் களில் உள்ள பட்டா இடங்களில் தற்கா லிகமாக வசித்து வருகின்றனர். அதை தங்களது பெயர்களில் பட்டா மாறுதல் செய்துதர வேண்டி கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, 35 நரிக்குறவர் மக்க ளுக்கு பட்டா மாறுதல் ஆணை வழங் கும் விதமாக முதல்கட்டமாக 11 நரிக் குறவர் மக்களுக்கு பட்டா மாறுதல் ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார். மேலும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் ஒவ்வொரு நபர்களுக் கும் தலா ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்காக தொகை ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எம்.சின்னதுரை எல்எல்ஏ வரவேற்பு
ரெங்கம்மாள் சத்திரம் பகுதியில் நரிக்குறவர் இனமக்கள் சுமார் 100 குடும் பங்கள் வசித்து வருகின்றனர். இவர் களில் சிலர் தங்கள் முன்னோர் பெயரில் உள்ள பட்டா இடத்திலும், சிலர் அரசுப் புறம்போக்கிலும் குடியிருந்து வருகின் றனர். முன்னோர் பெயரில் உள்ள பட்டாக்களை தற்பொழுது உள்ள வாரிசுகளின் பெயரில் பட்டா மாறுதல் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாகப் போராடி வந்தது. தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர் என்ற வகையில் நானும் இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளேன். இந்நிலையில், முதல்கட்டமாக முன்னோர்கள் பெயரில் உள்ள பட்டாக் களை வாரிசுகளுக்கு மாறுதல் செய்து கொடுத்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறையினருக்கு பாராட்டுக் களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அத்தோடு, அங்கு வசிக் கும் அனைவருக்கும் மனைப்பட்டா வழங்க வருவாய்த்துறையினர் முன் வரவேண்டும். மேலும், மாவட்டத்தில் உள்ள இதரப் பகுதிகளிலும் இதுபோல பட்டா கிடைக்காமல் தவித்துவரும் ஏழை மக்க ளுக்கும் பட்டா வழங்க மாவட்ட நிர்வா கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எம்.சின்னதுரை எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.