அறந்தாங்கி, நவ.24- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மையப்பகுதி யான பேருந்து நிலையம் அருகில் காந்தி பூங்கா சாலை யில் நீண்டகாலமாக செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையத்தில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். அந்த குழந்தைகள் இயற்கை உபாதை மற்றும் சிறுநீர் கழிக்க கட்டிட வசதி இருந்தும் தண்ணீர் வசதி இல்லா மல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அங்கன்வாடி கட்டிடம் அருகே நகராட்சி செப்டிக் டேங்க் திறந்த நிலை யிலும், மனித கழிவுகள் மிதந்துகொண்டு துர்நாற்றம் வீசுவதால். குழந்தைகள் பாதிப்படைகின்றனர். அங்கன்வாடி கட்டிடத்தின் பின்புறம் உள்ள குப்பை கிடங்கால் மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் குழந்தைகளுக்கு பரவ வாய்ப்புள் ளது. எனவே, இவற்றை உடனே சரிசெய்ய வேண்டும் என்று. அப்பகுதி மக்களும். பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.