districts

கீரனூர் பேரூராட்சிக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துக! விதொச சார்பில் மனுக் கொடுக்கும் போராட்டம்

புதுக்கோட்டை, மே 12-  புதுக்கோட்டை மாவட்டம் கீர னூர் பேரூராட்சிக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தக் கோரி அகில இந்திய விவசாயத் தொ ழிலாளர் சங்கம் சார்பில் வியாழ னன்று மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. நகரப் பகுதிகளுக்கும் தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வரு டத்திற்கு நூறு நாள் வேலை வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் தொடர்ச் சியாக போராட்டங்களை நடத்தியும் வருகிறது. இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக சில பேரூராட்சிகளுக்கு இத் திட்டத்தை அரசு விரிவுபடுத்தியுள்ளது. இந்நிலையில், கீரனூர் பேரூ ராட்சிக்கும் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை வழங்க வலி யுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம் சார்பில் நடைபெற்ற போ ராட்டத்தில் கீரனூர் பேரூராட்சிக்குட் பட்ட 600-க்கும் அதிகமானோர் பேர ணியாகச் சென்று செயல் அலுவலர் கு.சின்னசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். போராட்டத்திற்கு விதொச ஒன்றி யத் தலைவர் வி.பழனிச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.பெரு மாள் முன்னிலை வகித்தார். போராட் டத்தில் கலந்துகொண்டு சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.சங்கர் சிறப் புரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், சங்கத்தின் மாநி லக்குழு உறுப்பினர் எம்.சண்முகம், மாவட்டச் செயலாளர் கே.தங்க வேல், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செலவன், பேரூராட்சி கவுன் சிலர் எம்.மகாலெட்சுமி உள்ளிட்டோர் பேசினர்.