districts

img

அரிமளம் பேரூராட்சிக்கு நூறு நாள் வேலை திட்டம் கொண்டு வரப்படும் அமைச்சர் எஸ்.ரகுபதி வாக்குறுதி: சிபிஎம் நன்றி

புதுக்கோட்டை, பிப்.18 - புதுக்கோட்டை மாவட்டம் அரி மளம் பேரூராட்சிக்கு நூறு நாள்  வேலைத்திட்டம் கொண்டு வர நடவ டிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வாக்குறுதி அளித் ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  நன்றி தெரிவித்துள்ளது.  அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட  வார்டுகளில் போட்டியிடும் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி வியாழக்கிழமை இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், பேரூராட்சிகளுக்கு மாநில அரசே நிதி ஒதுக்கி நூறு நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தி வரு கிறது. அடுத்த அறிவிப்பில் அரிமளம் பேரூராட்சிக்கு நூறுநாள் வேலை திட்டத்தை கொண்டு வர உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒரு  கோடியே 30 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை அமைக்க ஏற்கனவே நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது.  தேர்தல் முடிந்ததும் திட்டம் நடை முறைப்படுத்தப்படும். அனைத்து பகுதி களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்,  தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை  தேவைகள் தேர்தல் முடிந்த சில நாட்க ளிலேயே தீர்த்து வைக்கப்படும்.

அதற்கு நீங்கள் மதச்சார்பற்ற முற்போக் குக் கூட்டணியில் போட்டியிடும் 15 வேட்பாளர்களையும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். பிரச்சாரத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் பொன்.ராமலிங்கம் தலைமை  வகித்தார். திருமயம் ஒன்றியச் செய லாளர் அழகு சிதம்பரம், சிபிஎம் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் உள்ளிட்டோர் பேசினர். சிபிஎம் நன்றி அரிமளம் பேரூராட்சிக்கு நூறு நாள் திட்டம் கொண்டுவர வலியுறுத்தி கடந்த காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கமும் பல கட்டப் போராட்டங்களை நடத்தியுள் ளது. இந்நிலையில், அரிமளம் பேரூ ராட்சிக்கு நூறு நாள் வேலை திட்டம்  கொண்டு வரப்பட வேண்டும் என்ற  அமைச்சரின் அறிவிப்பு வரவேற்புக்குரி யது. எங்கள் கோரிக்கையை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ள சட்டத் துறை அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரிமளம் ஒன்றி யம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கட்சியின் ஒன்றியச் செய லாளர் ஆர்.வி.ராமையா தெரிவித்துள் ளார்.