districts

img

எய்டு இந்தியா சார்பில் ஏழை மாணவர்களுக்கு மிதிவண்டி, கல்வி உதவித்தொகை வழங்கல்

புதுக்கோட்டை, டிச.2 - இந்திய வளர்ச்சி இயக்கம் சார்பில்  ஏழை மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி, கல்வி உதவித் தொகை களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யர் மு.அருணா, கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோர் திங்கள்கிழமை வழங்கினர்.

புதுக்கோட்டை அருகே காமராஜ் நகர், ரெங்கம்மாள் சத்திரம் பகுதி களைச் சேர்ந்த இந்து ஆதியன் இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சுமார் 40 குடும்பங்கள் வசித்து  வருகின்றனர். மிகவும் ஏழ்மை நிலை யில் வசித்து வரும் இவர்களுக்கு எய்டு இந்தியா நிறுவனம் சார்பில் இலவச வீடு, மாணவர்களுக்கான கல்வி உப கரணங்களை வழங்கப்படுகிறது.

அதனொரு பகுதியாக, இப்பகுதி யில் வசிக்கும் 30 மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளும், கல்வி  உதவித் தொகையாக 6 பேருக்கு  ரூ.1,33,000 மதிப்பிலான காசோலை களும் வழங்கப்பட்டன. இந்த உதவி களை மாவட்ட ஆட்சியர் மு.அருணா, கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் கவிஞர் எஸ்.கவி வர்மன், தன்னார்வலர்கள் எஸ்.சங்கர்,  டி.சலோமி, எஸ்.ரகுபதி, ஏ.தேவ ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  முன்னதாக எய்டு இந்தியா நிறுவ னத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.ராஜா வரவேற்க, இணை ஒருங்கி ணைப்பாளர் ஆர்.பிச்சம்மாள் நன்றி கூறினார்.