புதுக்கோட்டை, மார்ச் 16 - பிரதமர் மோடி தேர்தலுக்காக தமிழ் நாட்டுக்கு எத்தனை முறை படையெடுத் தாலும் அவரை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு.
புதுக்கோட்டையில் வெள்ளிக் கிழமை இரவு அவர் செய்தியாளர்களு க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
புதுக்கோட்டையை மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். மாநகராட்சி தரம் உயர்த் தப்பட்டால் பல்வேறு திட்டங்கள் வரும். குடிநீர், சாலைகள், பாதாளச் சாக்கடை திட்டங்கள் வரும். அதேபோல், வீடு கட்டும் திட்டம், கழிவறை, வடிகால் வசதிகள் ஏற்படும். மாநகராட்சியால் வரி அதிகரிக்கும் என்ற ஐயம் வேண்டியதில்லை.
அனைத்து இடங்களுக்கும் சீரான வரிதான் போட்டுள்ளோம். சௌகரி யங்கள் அதிகரிக்கும் போது சில காசு கள் அதிகரிக்கத்தான் செய்யும். பேருந்து நிலையங்கள் பெரிதாக வரும். பக்கத்தில் உள்ள ஊராட்சிகளில் எல்லாம் சேரும்போது அந்த ஊராட்சிக ளும் வளர்ச்சி அடையும். வேலை வாய்ப்பு உருவாகும். தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி எத்தனை முறை வேண்டுமானாலும் வரட்டும். வெள்ள காலங்களில் தமிழ்நாட்டை அவர் எட்டிப் பார்க்க வில்லை. கேட்ட நிதியையும் அவர் தரவில்லை.
ஆனால் மற்ற மாநிலங்க ளில் வெள்ள பாதிப்பை பார்க்க சென்ற தோடு, நிதியையும் தாராளமாக வழங்கி யுள்ளார். இப்படி இருக்கும்போது, தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை மோடி படை எடுத்தா லும் அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.