districts

img

நாகுடி கடைமடை பகுதிக்கு வந்த காவிரி நீருக்கு மலர்தூவி விவசாயிகள் உற்சாக வரவேற்பு

அறந்தாங்கி, ஜூன் 11-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிக்கு வந்த காவிரி நீருக்கு விவசாயிகள் மலர் நெல்மணிகளைத் தூவி வரவேற்றனர்.  காவிரி நீர் மூலம் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் விவசாயம் செய்து வருகின்றன. ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி விவசாயப் பணிகளுக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு விவசாயிகளின் நலன்கருதி மே 24 ஆம் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது.  இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட பாசனத்திற்காக கடந்த ஜூன் 5 ஆம் தேதி கல்லணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், ஜூன் 11 ஆம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை அறந்தாங்கியின் கடைமடை பகுதியான நாகுடி ஆற்றுக்கு வந்த காவிரி நீரை கல்லணை கால்வாய் பாசனதாரர் சங்க தலைவர் கொக்குமடை ரமேஷ் தலைமையில், செயலாளர் வீரப்பன், சங்க சட்ட ஆலோசகர்கள் சிவசுப்பிரமணியன், தமிழ்வாணன், ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் மலர்கள், நெல்மணிகளை தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.