புதுக்கோட்டை, மார்ச்.10- சுய சிந்தனைக்கும், அறிவியல் வளர்ச்சிக்கும் தாய்மொழிக்கல்வி மிகவும் அவசியம் என்று இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு தாய்தமிழ் பள்ளியின் 25-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழா வில் பங்கேற்ற இஸ்ரோ மேனாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை புதிய கட்டிடங்களை திறந்துவைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘கல்வி தான் நாட்டையும், தனி மனிதனின் வாழ்க்கையையும் முன்னே ற்றும். இந்தியாவிலே முன்னோடி மாநிலம் தமிழ்நாடுதான் என்றாலும், உலக நாடுகளில் தமிழ்நாட்டை முதன்மைப்படுத்த முயற்சிக்க வேண்டும். அது தமிழ்வழிக் கல்வி முறையிலே சாத்தியமாகும். சுய சிந்தனைக்கு தாய்மொழி வழிக்கல்வி தான் சிறந்தது. உலக நாடுகளில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்பதற்கு விண்வெளித்துறை முக்கியப்பங்கு வகிக்கிறது. அதில் தமிழர்களின் பங்கு அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்க தற்போது தமிழ்நாடு அரசு முயற்சி எடுத்துள்ளது பாராட்டத்தக்கது.
தாய்மொழிச் சிந்தினையே சிறந்த அறிவியலாளர்களை உருவாக்கும். இதற்கு உறுதுணையாக இருக்கும் தாய்தமிழ் பள்ளிகள் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 18 தாய்த்தமிழ் பள்ளிகளையும் அரசு தத்தெடுக்க முன்வரவேண்டும்’’ என்றார். விழாவில், தமுஎகச மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன், மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல் வம், திக மாவட்டத் தலைவர் அறி வொளி, நல்லாசிரியர் துரை.மாணிக்கம் உள்ளிட்டோர் பேசினர். பள்ளியின் நிறுவனர் ராஜா வரவேற்க, தாளாளர் ரஞ்சனி நன்றி கூறினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இந்தியர்கள் நிலவில் கால் பதிக்கக்கூடிய நாள் விரை வில் வரவேண்டும். என்னை பொறுத்த வரை இனி நிலவுக்கோ, செவ்வாய்க் கோ செல்வதற்கு சர்வதேச ஒத்து ழைப்பு வேண்டும் என்பதுதான். ஏனென்றால் அதிகமான பணச் செலவுகள் செய்ய வேண்டிய கட்டா யம் உள்ளது. சந்திரயான் நமது தலைமையில் எடுத்துச் சென்றாலும் நம்மோடு பல நாடுகளை சேர்த்து சென் றோம். அதைத்தான் நான் முன்வைக் கின்றேன். அனைவரும் கூட்டாக சென்றால் மனித குலத்திற்கு சிறப்பாக இருக்கும். பூமி வெப்பமயமாவதைத் தடுப்பது நம் கையில்தான் உள்ளது. அதற்கு தகுந்தாற்போல் மாசு கட்டுப்பாடுகளை சரியாக பயன்படுத்த வேண்டும். நம்மால் முடிந்தவரை வெப்பத்தை உருவாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.