districts

img

சிறுபான்மையினர் நலனைக் கருத்தில்கொள்வது அவசியம்: நந்தலாலா

புதுக்கோட்டை, மார்ச் 26- இன்றைய சூழலில் சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொண்டு அக்கறை செலுத்த வேண்டிய   அவசியத்தில் அனை வரும்  இருக்கிறோம் என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கவிஞர்  நந்தலாலா எழுதிய  “ஊறும் வரலாறு”  புத்தகத்தின் அறிமுக விழா ஞாயிற்றுக் கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் ஏற்புரையாற்றிய நந்தலாலா, “ஒருவரை அவர் வாழ் நாளுக்குள் பாராட்டு வதும், கொண்டாடுவதும் அவசியம். சிறு பான்மையினர் நலனைக் கருத்தில்கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.  பெண் படைப்பாளர்கள் எந்த இயக்கத் தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது கணவர்கள் மனிதாபிமானத் தோடு துணை நிற்பதைக் காண்கிறேன். எனது தொடரில் கவிஞர் வாலி பற்றி ஏன்  எழுதவில்லை எனக் கேட்டார்கள். வாலியைப் பற்றி யார் வேண்டுமானாலும் எழுதலாம். குமுதினி போன்றோரை எழு தத்தான் நந்தலாலா வேண்டும் என்றார். விழாவிற்கு தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி பன்னீர்செல்வன் தலைமை வகித்தார்.  செயலாளர் ஸ்டாலின் சரவணன் அறிமுக உரையாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் நா.முத்துநிலவன் துவக்கவுரை யாற்றினார். ரமா ராமநாதன், உஷாநந்தினி ஆகியோர் கருத்துரையாற்றினர். முன்ன தாக கபார்க்கான் வரவேற்க, மாவட்டப் பொரு ளாளர் கி.ஜெயபாலன் நன்றி கூறினார். சாமி கிரீஸ் தொகுத்து வழங்கினார்.